Monday, April 12, 2010

oh day holiday

ஹப்பா! என்ன நிம்மதி ஒன்றரை வருஷம் பட்ட கஷ்டமெல்லாம் இனி வேணாம். எங்க வீட்லயும் யாரும் படி படின்னு சொல்லி டென்ஷன் ஆக்க வேணாம்.

back to march 23rd
முதன் முதலா பப்ளிக் எக்ஸாம். ம்ம்ம் no words to say the tension . it was abdruptly increased because of the phone calls from my well wishers. காலைல நிம்மதியான தூக்கத்தை கெடுத்து 6 மணிக்கு போன் பண்ணி all the best சொன்ன சித்தப்பா. ஸ்கூலுக்கு வந்து தைரியமா இருன்னு சொன்ன அப்பா அப்பாப்ப எவ்ளோ பாசம். 9.45-10.00 am எக்ஸாம் ஹாலில் சும்மா இருக்கனும் என்ன கொடுமை சரவணா அது . wrist watch ல் நொடி முள் எப்படி சுத்துமோ அப்படி என் மனம் விநாயகரை சுற்றியது 'ப்ளீஸ் விநாயகரே நான் நல்லா எழுதனும் ' .

on april 9 final day in my 10th history

எக்ஸாம் முடிஞ்சு வெளில வந்தப்போ oh ! what a beautiful time that was. i felt as if i m doing somersaults. (எவ்ளோ நாள் தான் வானத்தில் பறக்கிற மாதிரின்னு சொல்லறது). நல்ல ஆசைதீர ப்ரண்ட்ஸ் கிட்ட பேசிட்டு வீட்டுக்கு வந்த பின் கவிதை எழுதினேன் கவிதை தான் நம்புங்க

வானம் என் வசம் வருகிறது
காற்றில் மண் வாசம் நுகர்கிறேன்
மேகங்களை தாண்டியது போ உணர்வு
சாப்பிட எண்ணமில்லை
பசியில்லை
மதிய தூக்கமில்லை
இளமை துள்ளியது
உலக மனிதர்களூள் அதீத சந்தோஷத்தோடு இருக்கின்றேன்
அல்ல அல்ல திளைக்கின்றேன் மகிழ்வில்
ஹே! அடிச்சிக்கோ 10th நமக்கு முடிஞ்சு!

இதுதான் அந்த கவிதை ( இதெல்லாம் கவிதையான்னு கேக்காதீங்கப்பா. இப்போ இப்படி ஆரம்பித்தால்  தான் வருங்காலத்தில் நல்லா சரி சரி சுமாராவது எழுதலாம்).

விரைவில் பிரபஞ்சனின் 'தீவுகள்' மற்றும் பாலகுமாரின் 'கரையோர முதலைகள்' பற்றி ஒரு போஸ்ட் பார்ப்போம்.

ok எல்லாரும் போஸ்டையும் கவிதையும் படிச்சிங்கள.so கமெண்ட்டும் ஒட்டும் போட்டுட்டு போங்க. எல்லாரும் தொடர்ந்து வாங்க .


53 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

சரி, சரி கவிதைய சொல்லுங்க :))

நாடோடி said...

சிங்க‌ம் க‌ள‌ம் இற‌ங்கிடுச்சு............

நாடோடி said...

//ok எல்லாரும் போஸ்டையும் கவிதையும் படிச்சிங்கள.so கமெண்ட்டும் ஒட்டும் போட்டுட்டு போங்க. எல்லாரும் தொடர்ந்து வாங்க . ///

த‌மிழிஷ்ல‌ இன்னும் இனைக்க‌ வில்லையா?...

நாடோடி said...

//ஆரம்பித்தால் தான் வருங்காலத்தில் நல்லா சரி சரி சுமாராவது எழுதலாம்///

வ‌ருங்கால‌த்தில் பெரிய‌ க‌விஞ‌ராக‌ வ‌ர‌ என‌து வாழ்த்துக்க‌ள்...

angel said...

சைவகொத்துப்பரோட்டா said...
சரி, சரி கவிதைய சொல்லுங்க :)

ம்ம் காமெடியாக்கும் உங்களுக்கு தெரியனும்னு தான் கலரெல்லாம் மாத்தி காட்டியிருக்கேன் இன்னும் தெரியலையா. சரி சீக்கிரம் கண்ணாடி போடுங்கப்பா அப்போவாது தெரியுதானு பார்ப்போம்.

இது தான் அது
வானம் என் வசம் வருகிறது
காற்றில் மண் வாசம் நுகர்கிறேன்
மேகங்களை தாண்டியது போ உணர்வு
சாப்பிட எண்ணமில்லை
பசியில்லை
மதிய தூக்கமில்லை
இளமை துள்ளியது
உலக மனிதர்களூள் அதீத சந்தோஷத்தோடு இருக்கின்றேன்
அல்ல அல்ல திளைக்கின்றேன் மகிழ்வில்
ஹே! அடிச்சிக்கோ 10th நமக்கு முடிஞ்சு!

ok

வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி சைவகொத்துப்பரோட்டா

angel said...

நாடோடி said...
சிங்க‌ம் க‌ள‌ம் இற‌ங்கிடுச்சு...........

எனக்கு புல் அறிக்கிது
பாருங்க எந்த ற ந்னு கூட தெரியல


த‌மிழிஷ்ல‌ இன்னும் இனைக்க‌ வில்லையா?

சாரி ஞாபக மறதி இப்போ இனைத்துவிட்டேன்

நாடோடி said...
//ஆரம்பித்தால் தான் வருங்காலத்தில் நல்லா சரி சரி சுமாராவது எழுதலாம்///
வ‌ருங்கால‌த்தில் பெரிய‌ க‌விஞ‌ராக‌ வ‌ர‌ என‌து வாழ்த்துக்க‌ள்..

மிக்க்கஆஆஆஆஆஆஆஆஆ நன்றி


வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி நாடோடி

கருந்தேள் கண்ணாயிரம் said...

செரி . . அதெல்லாம் இருக்கட்டும்... பிட்டு எப்புடி ரெடி பண்ணீங்க . . மைக்ரோ ஜெராக்ஸா இல்ல ஸ்கேல்ல எழுதியா . . இல்ல ஒவ்வொரு பாக்கெட்டுலயும் ஒரு பிட்டு வெச்சி, மேல் பாக்கட்ல ஒரு மாஸ்டர் பிட்டு வெச்சிருந்தீங்களா . .எது எது எங்கெங்க இருக்குன்னு தெரிஞ்சிக்க . .

எப்புடியோ, டென்த்து ஓவரு. . இனி மேல்மேலும் படிச்சி, ஃபிகரு ஓட்டி, தம்மு அடிச்சி, சரக்கடிச்சி, ஊர் சுத்தி, க்ளாசு பங்க்கு போட்டு, அட்டெண்டன்ஸ் லேக் ஆகி புகழடைய வாழ்த்துவது . . இதையெல்லாம் செஞ்சி ரவுசு பண்ணின உங்கள் கருந்தேள் . . கருந்தேள் . . கருந்தேள் . . :-)

Beski said...

//சரி, சரி கவிதைய சொல்லுங்க :))//

//உங்களுக்கு தெரியனும்னு தான் கலரெல்லாம் மாத்தி காட்டியிருக்கேன் இன்னும் தெரியலையா.//

:)))
இந்த இடங்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன...

மதார் said...

கவிதை நல்லா இருக்குப்பா , தொடர்ந்து எழுது. But u must concentrate on ur studies first . All the best for ur result .

ஹுஸைனம்மா said...

// 9.45-10.00 am எக்ஸாம் ஹாலில் சும்மா இருக்கனும் என்ன கொடுமை சரவணா அது //

நிஜமாவே ரொம்பக் கொடுமைதான்!! நானெல்லாம் கேள்வித்தாளைக் கூட முழுசாப் படிக்கமாட்டேன், தெரியாத கேள்வி இருந்தா டென்ஷனாகிடுமேன்னு!!

ஹுஸைனம்மா said...

/ஒன்றரை வருஷம் பட்ட கஷ்டமெல்லாம் //

இதென்ன எதோ டிகிரி, டிப்ளமா மாதிரி சொல்றீங்க ஒண்ணரை வருஷம்னு? ஓ, ஒம்போதங்கிளாஸ் பாதியிலேயே ஆரம்பிச்சுடுவாங்க இல்ல? நல்லவேளை நான் படிச்ச இஸ்கூல்ல அப்படிலாம் இல்ல!!

ஹுஸைனம்மா said...

பத்தாங்கிளாஸ் முடிச்சதுக்கு வாழ்த்துக்கள்!!

ஹுஸைனம்மா said...

//...கிளாஸ் படிக்கும்போது//

ஒவ்வொருக்கா இதச் சொல்லும்போதும் ‘கிளாஸ் அடிக்கும்போது’ன்னுதான் ஞாபகம் வருது!!

ஹுஸைனம்மா said...

அதுசரி, இதுக்கே இப்படி அலுத்துக்கிறீங்களே, பன்னெண்டாங்கிளாஸ் படிக்கும்போது இன்னும் எவ்ளோ பேர் (போறவங்க, வாறவங்க எல்லாம்கூட, இன்க்ளூடிங் மீ ஆல்ஸோ) ‘இதுதான் உன் வாழ்க்கையின் டர்னிங் பாயிண்ட்’ அப்பை இப்படியெல்லாம் பயங்காட்டுவாங்களே, அதுக்கென்னா செய்வீங்க?

angel said...

@ அதி பிரதாபன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதி பிரதாபன்.


@கருந்தேள் கண்ணாயிரம்
எல்லாரும் உங்கள மாதிரி இல்லையே என்ன செய்வது?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருந்தேள் கண்ணாயிரம்.

@ மதார்
ya sure
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதார்.

angel said...

//ஹுஸைனம்மா said...
பத்தாங்கிளாஸ் முடிச்சதுக்கு வாழ்த்துக்கள்!//
நீங்க ரொம்ப நல்லவங்க வாழ்த்தெல்லாம் சொல்றீங்க.

angel said...

//ஹுஸைனம்மா said...
/ஒன்றரை வருஷம் பட்ட கஷ்டமெல்லாம் //

இதென்ன எதோ டிகிரி, டிப்ளமா மாதிரி சொல்றீங்க ஒண்ணரை வருஷம்னு? ஓ, ஒம்போதங்கிளாஸ் பாதியிலேயே ஆரம்பிச்சுடுவாங்க இல்ல? நல்லவேளை நான் படிச்ச இஸ்கூல்ல அப்படிலாம் இல்ல!//


shit மிஸ் ஆயிடுச்சு .

நிலாமதி said...

வாழ்த்துக்கள் உங்கள் மகிழ்வில் நானும் பங்கு கொள்கிறேன். மேலும் கவி பல ....படையுங்கள்.

malarvizhi said...

சரி,சரி..நல்லா விடுமுறையை கொண்டாடுங்கள்.என் பையனும் பத்தாவது பரீட்சை முடித்து ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான்.இனி இரண்டு மாதத்திற்கு அவனை ஒன்றும்சொல்லமுடியாது.enjoy...

Ananya Mahadevan said...

naayeess.....
சரி பரீட்சை எப்புடீன்னு சொல்லவே இல்லையே ஏஞ்சல்? நிறைய மார்க்கு வாங்க வாழ்த்துக்கள்!

அதெல்லாம் இருக்கட்டும் வோட்டுப்பெட்டி எங்கே கண்ணு?

angel said...

ஹுஸைனம்மா said...
// 9.45-10.00 am எக்ஸாம் ஹாலில் சும்மா இருக்கனும் என்ன கொடுமை சரவணா அது //

நிஜமாவே ரொம்பக் கொடுமைதான்!! நானெல்லாம் கேள்வித்தாளைக் கூட முழுசாப் படிக்கமாட்டேன், தெரியாத கேள்வி இருந்தா டென்ஷனாகிடுமேன்னு!

ம்ம் என்னலாம் யோசிக்கிறீங்க எனக்கு இது மட்டும் தெரியல

angel said...

ஹுஸைனம்மா said...
அதுசரி, இதுக்கே இப்படி அலுத்துக்கிறீங்களே, பன்னெண்டாங்கிளாஸ் படிக்கும்போது இன்னும் எவ்ளோ பேர் (போறவங்க, வாறவங்க எல்லாம்கூட, இன்க்ளூடிங் மீ ஆல்ஸோ) ‘இதுதான் உன் வாழ்க்கையின் டர்னிங் பாயிண்ட்’ அப்பை இப்படியெல்லாம் பயங்காட்டுவாங்களே, அதுக்கென்னா செய்வீங்க

வெரி சிம்பிள் "உங்க 12th mark என்னானு கேட்பேன்

angel said...

ஹுஸைனம்மா said...
//...கிளாஸ் படிக்கும்போது//

ஒவ்வொருக்கா இதச் சொல்லும்போதும் ‘கிளாஸ் அடிக்கும்போது’ன்னுதான் ஞாபகம் வருது!

nono அதெல்லாம் தப்பு

வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றிகள் பல

angel said...

நிலாமதி said...
வாழ்த்துக்கள் உங்கள் மகிழ்வில் நானும் பங்கு கொள்கிறேன். மேலும் கவி பல ....படையுங்கள்

வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி நிலாமதி அவர்களே

angel said...

malarvizhi said...
சரி,சரி..நல்லா விடுமுறையை கொண்டாடுங்கள்.என் பையனும் பத்தாவது பரீட்சை முடித்து ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான்.இனி இரண்டு மாதத்திற்கு அவனை ஒன்றும்சொல்லமுடியாது.enjoy...

yes this is time for us to be relaxed .

வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி malarvizhi அவர்களே

angel said...

அநன்யா மஹாதேவன் said...
naayeess.....
சரி பரீட்சை எப்புடீன்னு சொல்லவே இல்லையே ஏஞ்சல்? நிறைய மார்க்கு வாங்க வாழ்த்துக்கள்!

அதெல்லாம் இருக்கட்டும் வோட்டுப்பெட்டி எங்கே கண்ணு

தங்கள் முதல் வருகைக்கு என் நன்றி.
பரீட்சையும் நன்று நானும் நல்லா எழுதிருக்கேன்
template மாற்றினேன் போயிடுச்சு நான் மீண்டும் போடுகிறேன்

வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி

திருவாரூர் சரவணா said...

அட ஆத்தாடி...பரீட்சை ரொம்ப பெரிய கசப்பு மருந்தா இருந்துருக்கும் போலிருக்கே. எழுதி முடிச்சதும் ரொம்ப பெரிய அளவுல சுதந்திரமா உணர்ந்துருக்குற மாதிரியில்ல இருக்கு.எதிர்காலத்தை நோக்கிய பிரகாசமான பாதையில தொடர்ந்து பயணம் செய்ய வாழ்த்துக்கள். நடுவுல இருட்டு இருந்தா பயப்படாதீங்க. இது எல்லாம் பவர் கட் மாதிரி சில மணி நேரங்கள்தான்.

hayyram said...

// இதெல்லாம் கவிதையான்னு கேக்காதீங்கப்பா. இப்போ இப்படி ஆரம்பித்தால் தான் வருங்காலத்தில் நல்லா சரி சரி சுமாராவது எழுதலாம்).//

உங்கள் ஆர்வத்திற்கும் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கள். தொடருங்கள். விடுமுறையைக் கொண்டாடுங்கள்.

anbudan
ram

www.hayyram.blogspot.com

Mythili (மைதிலி ) said...

Nallaa kavithai ezhuthiyirukkammaa.. Ellaam puriyuthu 10th Mudichchathukke ippadiyaa?? innum +2 irukkemaa?? athukku ippove padikka solluvaangale?? Athulayum colorfullaa vara en vaazhththukkal da.

Prathap Kumar S. said...

யக்கா...பரிட்சையெல்லாம் முடிஞ்சிடுச்சா... இப்படில்லாம் கவுஜை எழுதுவீங்கன்னு தெரிஞ்சா இன்னும் கொஞச நாளு பரிட்சை இருந்திருக்கலாம்னு தோனுது... :))

என்ன மாதிரி ஸ்டேட் ரேங்க் எடுப்பீங்களா--?? அட்லீஸ்ட் டிஸ்டிரிக்ட்? :))

Prathap Kumar S. said...

கருந்தேளு சொன்னதை அப்படியே ரிப்பீட்டு அடிக்கிறேன்....:))

ஜெய்லானி said...

ஹலோ, என்னது கருப்பு டெம்லேட்டில் கருப்பு எழுத்து. தலையும் புரியல வாலும் புரியல முதல்ல கலரை மாத்துங்க . படிக்கவும் முடியல ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? pls change the template

ஜெய்லானி said...

fire fox browser , check your site--thanks

'பரிவை' சே.குமார் said...

அம்மணிக்கு சுதந்திரம் கிடைத்த சந்தோஷம் வரிகளில் தெரிகிறது. கவிதை.... கவிதை மாதிரி இருக்கு. இன்னும் முயற்சியுங்கள் நல்ல கவிதை விரைவில்... அதற்காக இந்தக்கவிதை நல்லாயில்லை என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். இதனினும் இன்னும் நல்லதாக எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

அம்மணிக்கு சுதந்திரம் கிடைத்த சந்தோஷம் வரிகளில் தெரிகிறது. கவிதை.... கவிதை மாதிரி இருக்கு. இன்னும் முயற்சியுங்கள் நல்ல கவிதை விரைவில்... அதற்காக இந்தக்கவிதை நல்லாயில்லை என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். இதனினும் இன்னும் நல்லதாக எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

param said...

பரீட்சைக்கு இவ்வளவு பயப்படற அளவுக்கு படிப்புல ரொம்ப வீக்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!1111

angel said...

//திருவாரூரிலிருந்து சரவணன் said...
அட ஆத்தாடி...பரீட்சை ரொம்ப பெரிய கசப்பு மருந்தா இருந்துருக்கும் போலிருக்கே. எழுதி முடிச்சதும் ரொம்ப பெரிய அளவுல சுதந்திரமா உணர்ந்துருக்குற மாதிரியில்ல இருக்கு.எதிர்காலத்தை நோக்கிய பிரகாசமான பாதையில தொடர்ந்து பயணம் செய்ய வாழ்த்துக்கள். நடுவுல இருட்டு இருந்தா பயப்படாதீங்க. இது எல்லாம் பவர் கட் மாதிரி சில மணி நேரங்கள்தான்//

ரொம்ப சந்தோஷம் நல்ல வேளை என்னை கலாய்க்காம விட்டுட்டிங்க அதுக்கு 1st thanks. கொஞ்சம் கசபு மருந்து தான் என்ன செய்ய.
வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி

angel said...

hayyram said...
// இதெல்லாம் கவிதையான்னு கேக்காதீங்கப்பா. இப்போ இப்படி ஆரம்பித்தால் தான் வருங்காலத்தில் நல்லா சரி சரி சுமாராவது எழுதலாம்).//

உங்கள் ஆர்வத்திற்கும் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கள். தொடருங்கள். விடுமுறையைக் கொண்டாடுங்கள்.

anbudan
ram//

கண்டிப்பா கொண்டாடுரேன்
வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி

angel said...

/மைதிலி கிருஷ்ணன் said...
Nallaa kavithai ezhuthiyirukkammaa.. Ellaam puriyuthu 10th Mudichchathukke ippadiyaa?? innum +2 irukkemaa?? athukku ippove padikka solluvaangale?? Athulayum colorfullaa vara en vaazhththukkal da.//

அதெல்லாம் இன்னும் எங்க வீட்ல ஆரம்பிக்கல . இப்போவே ஆரம்பித்தால் நான் அழுதிருவேன்.

வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி

angel said...

//நாஞ்சில் பிரதாப் said...
யக்கா...பரிட்சையெல்லாம் முடிஞ்சிடுச்சா... இப்படில்லாம் கவுஜை எழுதுவீங்கன்னு தெரிஞ்சா இன்னும் கொஞச நாளு பரிட்சை இருந்திருக்கலாம்னு தோனுது... :))

என்ன மாதிரி ஸ்டேட் ரேங்க் எடுப்பீங்களா--?? அட்லீஸ்ட் டிஸ்டிரிக்ட்? :))//

ம்ம்ம் அப்பறம் கவிதை ரொம்ப நீளமா வரும் ம்ம்ம் ஜாக்கிரதை.
நானே international level யோசிக்கிறேன் நீங்க என்னான்னா

//நாஞ்சில் பிரதாப் said...
கருந்தேளு சொன்னதை அப்படியே ரிப்பீட்டு அடிக்கிறேன்....:))//

நான் அவருக்கு கூறிய பதிலை ரிப்பீட்டு அடிக்கிறேன்

வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி

angel said...

to
ஜெய்லானி
hi i m using chrome but whn i checked thru my frnd she told its clear to read

this is my e-mail id angelintotheheaven@ymail.com
so pls cum ol if possible let me try to solve it thank u for visit n comment

angel said...

//குமார் said...
அம்மணிக்கு சுதந்திரம் கிடைத்த சந்தோஷம் வரிகளில் தெரிகிறது. கவிதை.... கவிதை மாதிரி இருக்கு. இன்னும் முயற்சியுங்கள் நல்ல கவிதை விரைவில்... அதற்காக இந்தக்கவிதை நல்லாயில்லை என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். இதனினும் இன்னும் நல்லதாக எழுதுங்கள்.//

thanks நீங்க தான் சுமாராவாது இருக்குன்னு சொல்லிருக்கிங்களே அதுக்கு முதலில் மிக பெரிய நன்றி

வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி

angel said...

param said...
பரீட்சைக்கு இவ்வளவு பயப்படற அளவுக்கு படிப்புல ரொம்ப வீக்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!

oh my god wht a shame if u cum to nagercoil just ask to my skl teachers they will say abt me.

பித்தனின் வாக்கு said...

என்னங்க நீங்க, எல்லாப் பதிவையும் படிக்கச் சொன்னீர்கள் என்று பார்த்தால் ஒரே இங்கிலி பீச்சும், கணக்கு மாதிரி பார்முலா எல்லாம் இருக்கு. குழந்தைப் பையன் பயந்து ஓடி வந்துவிட்டேன். எனக்கு இது ரெண்டும் அலர்ஜி.

சமயம் கிடைக்கும் போது எல்லாம் முந்தைய பதிவுகளைப் படிக்கின்றேன். நன்றி.

CS. Mohan Kumar said...

Have a happy holidays!! பால குமாரன் புத்தகம் எல்லாம் அதுக்குள் படிகிரியா?? :))

angel said...

to
பித்தனின் வாக்கு

நீங்க தயவு செய்து அதெல்லாம் படிக்காதீங்க அந்த கோவம் பற்றி எழுதியதை மட்டும் படிங்க இனி வர வருவதை தொடர்ந்து படிங்கள்

தங்கள் முதல் வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி

angel said...

to

மோகன் குமார்

thank u for d wishes

இத பத்தி நான் அடுத்த போஸ்ட்ல சொல்றென் ok

தங்கள் வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி

திருவாரூர் சரவணா said...

//ரொம்ப சந்தோஷம் நல்ல வேளை என்னை கலாய்க்காம விட்டுட்டிங்க அதுக்கு 1st thanks.//

பாப்பா...அவசரப்பட்டு நன்றி சொல்லிட்டா எப்புடி...இனிமேதான இருக்கு...

பின்னோக்கி said...

இன்னும் 5 அல்லது 6 வருடங்கள் கழித்து, 10வது எக்ஸாம்க்கு இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சோமான்னு தோணும் :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஏஞ்சல் உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

ரிஷபன் said...

Welcome Back!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.